மண்கும்பான் மத்தியில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் சிவகாமி அம்மன் ஆலயத்தை மிகப்பிரமாண்டமாக புனரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவது நீங்கள் அறிந்ததே-
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் மண்கும்பான் மக்களின் நிதிபங்களிப்போடு ஆரம்பிக்கப்பட்ட இப்புனரமைப்பு பணிகளுக்கு மேலும் நிதி தேவைப்படுவதனால்-உலகமெல்லாம் பரந்து வாழும் மண்கும்பான் மக்கள் ஆலய திருப்பணிக்கு உதவிட முன் வருமாறு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுகின்றது.
எம்கிராமத்தினை விட்டு நாம் இடம்பெயர்ந்தாலும்-அங்கு வாழ்கின்ற எம் உறவுகளின் வழிபாட்டுக்காகவும்-அழிந்து வரும் தர்மநெறிகளினைக் காத்து ஒழுக்கமுள்ளவர்களாக-நீதிமான்களாக-எமது அடுத்த தலைமுறையினர்களின் வாழ்வின் ஆதாரமாகவும் ஆலயங்களே தற்போது உள்ளன-அப்படியான அந்த ஆலயங்களை புனரமைத்து அழகுபடுத்தி அடுத்த தலைமுறையின் வழிபாட்டுக்கு வழியமைத்துக் கொடுப்பது எமது கடமையல்லவா?சிந்திப்போம்!ஆலய திருப்பணிக்கு உதவிடுவோம் வாருங்கள்!
அனைத்து தொடர்புகளுக்கும்
திரு செல்வரத்தினம் கோகிலரூபன் (கோகிலன்)பிரான்ஸ்
தொலைபேசி இலக்கம்-0033651753543