நம்ப முடியவில்லை,,,,,,,,,,,,
அல்லைப்பிட்டிக்கு பெருமை சேர்த்து வந்த யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மூன்றாம் வருட மாணவி இரட்ணேஸ்வரன் வித்தியா(அம்முக்குட்டி) அவர்கள் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக-அவரது இல்லத்திற்கு சென்ற எமது செய்தியாளர் உடனடியாக எமக்கு அறிவித்துள்ளார்.தாம் சென்ற போது மாணவி வித்தியா தூக்கில் தொங்கிய நிலையிலேயே காணப்பட்டதாகவும் அவர் எமக்கு மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது பிரேதபரிசோதனைக்காக சடலம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லைப்பிட்டி கிராமத்திற்கு பெருமை சேர்த்து வந்த மாணவி வித்தியாவின் திடீர் மரணம்-எம் கிராமத்திற்கு பேரிழப்பேயாகும்.
தனது புதிய புகைப்படங்கள் பலவற்றை முகநூலில் பதிவேற்றம் செய்துவிட்டே-மாணவி வித்தியா தற்கொலை செய்துள்ளார்.