
இன்று (15) காலை கடற்கரைப்பகுதியில் குறித்த வெடிபொருள் காணப்பட்ட நிலையில மீனவர்களால் அது அடையாளம் காணப்பட்டுள்ளது.
கடந்த கால போரின் போது கடலில் வீழ்ந்து வெடிக்காத நிலையில் தற்போது வீசும் கடும் காற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள கடும் அலை நிலையின் காரணமாக இக்குண்டு கரை ஒதுங்கியுள்ளதாக, பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டு, வெடிபொருளை அகற்றுவது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.