அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, இரண்டு குடும்பத்தலைவிகள் கடும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்-அவர்களுக்கு உதவிட முன்வருமாறும்-அல்லையூர் இணையம் அண்மையில் வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தது நீங்கள் அறிந்ததே! நாம் விடுத்த வேண்டுகோளினை வாசித்து அறிந்து கொண்ட-சில கருணைமிக்க சில உள்ளங்கள் அவர்களுக்கு உதவிட முன் வந்தனர்.
விபரங்கள் கீழே இணைப்பு
நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இருவரின் பெயர்கள்
01-திருமதி சோமசிறி புஸ்பராணி(மணி)அமரர் சின்னத்துரை அவர்களின் புதல்வி
02-திருமதி தேவியம்மா இராசரட்ணம்-அமரர் அருணாசலம் அவர்களின் புதல்வி
இவர்களுக்கான நிதியினை வழங்கிய அந்த கருணை மிக்க உள்ளங்களுக்கு-பாதிக்கப்பட்டவர்களின் சார்பிலும்-அல்லையூர் இணையத்தின் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.இவர்கள் தமது பெயர் விபரங்களை வெளியிடவேண்டாம் என்று பெருந்தன்மையோடு எம்மிடம் கேட்டுக் கொண்டபோதிலும்-உதவிய அந்த உள்ளங்களையும்-எமது இணையத்தின் நம்பிக்கையை தொடர்ந்தும் பேணும் முகமாக அவர்களின் பெயர்களை இணைக்க வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.
பெயர் விபரங்கள்
01-திருமதி தேவராசா முத்துலட்சுமி-பிரான்ஸ்
02-திரு தவவிநாயகம் சூரியகுமார்-பிரித்தானியா
03-அமரர்கள் திரு,திருமதி,இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி(சார்பாக வழங்கப்பட்ட நிதி)
04-திரு வியாகரத்தினம் விமலராஜா (பிரான்ஸ்)
05-திரு செல்லையா சிவா-பிரான்ஸ்
இவர்களினால் வழங்கப்பட்ட மொத்தம் 60 ஆயிரம் ரூபாக்களை-கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் மேற்பார்வையில்-செவ்வாய்க்கிழமை அன்று அல்லைப்பிட்டி மெதடிஸ்த திரு அவையின் போதகர் கருணைராஜ் அவர்களும்-மற்றும் சமூக ஆர்வலர் திரு மகேஸ்வரநாதன் அவர்களின் புதல்வர் கிருசன் அவர்களும் இணைந்து-பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக சென்று வழங்கியிருந்தனர்.
இவர்கள் அனைவருக்கும் அல்லையூர் இணையத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இதனுடன் தொடர்புபட்ட முன்னைய செய்தி