
இது கதையல்ல நிஜம்!
*****************************************************
எங்கள் சகோதரன் வெளிநாடு சென்றபின் 1992வரை எங்களோடு கடிதம் தொலைபேசி என தொடர்புகளை மேற்கொண்டிருந்தார் அதன்பின் அவருடனான தொடர்புகள்
துண்டிக்கப்பட்டு விட்டன . பின்னர் 2002ம்ஆண்டு அவரது நண்பரும் அவரோடு
ஒன்றாக வெளிநாடு சென்ற எமது ஊரைச்சேர்ந்த ஒருவர் எங்கள் வீட்டுக்கு
வந்து எமது சகோதரன் நோய்வாய்ப்பட்டு சுயநினைவிழந்து.(கோமாவில்)
வைத்தியசாலையில்இருப்பதாக கூறி அவரது ஒரு நிழல்ப்படத்தையும் தந்து விட்டு சென்றார்.. அதன்பின்
இன்றுவரை அதாவது 2010வரை எங்கள் சகோதரனைப்பற்றிய எந்தவிதமான
தகவலும் இன்றி நாங்கள் தவிக்கின்றோம்.என்று கண்ணீரோடு கூறிவிடைபெற்றார்ஆகவே இவர் இன்று உயிருடன்தான் இருக்கின்றாரா?
அல்லது இறந்து விட்டாரா?என்பதனை அறிந்து கொள்ள இவரது
நண்பரைத்தேடினோம். அவரோடு தொடர்பினை ஏற்படுத்தி பாலன் பற்றிய தகவல்களை கேட்டோம். பாலனுக்கு 1992ஆம் ஆண்டு மனநிலையில் மாற்றம் ஏற்பட்டதனால் அவருக்கு கட்டாய சிகிச்சை அளிக்கப்பட்டதுஎன்றும் அதனால் ஏற்பட்ட மாற்றத்தினால் அவர் சுயநினைவை இழந்து விட்டார் என்றும் தான் அவரை சென்று பார்த்ததாகவும் கூறினார். இப்போது அவர் உயிருடன் உள்ளாரா?என்ற எமது கேள்விக்கு ஊர்ஜிதப்படுத்தாத தகவல்களின் அடிப்படையில் தற்போது அவர் உயிருடன் இல்லை என்றே தாம்
கருதுவதாக தெரிவித்தார். தொடர்ந்து தாம் அவரைப்பற்றிய
தகவல்களை சேகரித்து எமக்கு தருவதாக
உறுதியளித்துவிடைபெற்றார்.இதைப் படிக்கும் உங்களுக்கு இவரைப்பற்றி மேலதிகமாக விபரங்கள் தெரிந்திருந்தால் எம்மோடு தொடர்பு கொண்டு தெரிவியுங்கள். ஏனெனில் இவர் உயிருடன்தான் உள்ளார் எனஎதிர்பார்த்து காத்திருக்கும் இவரை பெற்ற தாய்க்கும் இவரது சகோதரர்களுக்கும் நாம் முடிவாய் ஒரு செய்தியை தெரிவிக்கலாமே!!!!!!!!!
பின் குறிப்பு
சுயநினைவிழந்து வாடிய அந்த இளைஞர் தற்போது உயிருடன் இல்லை என்ற செய்தியினை அவரது நண்பர்கள் உறுதியுடன் தெரிவிக்கின்றனர்.