யாழ் தீவகம் வேலணை வங்களாவடி முருகனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 24.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் நடைபெற்று வந்ததுடன்-01.08.2016 திங்கட்கிழமை அன்று தேர்த்திருவிழாவும்- 02.08.2016 செவ்வாய்கிழமை ஆடிஅமாவாசை அன்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் -வேலணை சாட்டி வெள்ளைக்கடற்கரையில் தீர்த்தமாடும் தீர்த்தத் திருவிழாவும்-இடம்பெற்றது.
வேலணை வங்களாவடி முருகப்பெருமானின் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்டு-உங்கள் பார்வைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது-என்பதனை அறியத்தருகின்றோம்.
திங்கள் (02.08.2016) ஆடி அமாவாசை அன்று காலை முருகப்பெருமான் வள்ளி-தெய்வானையுடன் சாட்டிக்கடலில் தீர்த்தமாடிய கண்கொள்ளாக் காட்சியினை உங்கள் பார்வைக்கு- முழுமையான வீடியோப் பதிவாக-நிழற்படத் தொகுப்பாக கீழே இணைத்துள்ளோம்.
பரிஸில் தமிழ் மக்களின் நன் மதிப்பினைப் பெற்று- பல்லாண்டு காலம் சேவையாற்றி வரும் – வேலணையைச் சேர்ந்தவரினால் நடத்தப்பட்டு வரும்- நாணயமாற்று நிறுவனங்களின் உரிமையாளரே-வேலணை வங்களாவடி முருகனின் வருடாந்தத் திருவிழாவிற்கான வீடியோ மற்றும் நிழற்படப் பதிவுகளுக்கான நிதி அனுசரணையினை வழங்கியுள்ளார்- என்பதனை அறியத் தருகின்றோம்.