யாழ் தீவகம் அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழா-16-07-2016 சனிக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இம்முறை அருட்பணி ஜெயரட்ணம் அவர்களின் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதாகவும்- பல நூற்றுக்கணக்கான புனித கார்மேல் அன்னையின் பக்தர்கள் இத்திருப்பலி வழிபாடுகளில் கலந்து கொண்டதாகவும்- எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வழமை போல அல்லையூர் இணையத்தினால், புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழா இம்முறையும் முழுமையாக வீடியோப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் முழுமையான நிழற்படப்பதிவினையும் மேற்கொண்டுள்ளோம்.
கீழே வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அனுசரணை
எமது இணையத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவிவருபவரும்,அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்குரியவரும்-மண்மறவாத மனிதரும்-சமூக ஆர்வலரும்-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் பக்தருமாகிய, பிரான்ஸில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திரு எஸ்.ராஜலிங்கம் (எஸ்.ஆர்) அவர்களே-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த,பெருநாள் விழாவின் வீடியோப்பதிவு மற்றும் நிழற்படப்பதிவு ஆகியவற்றுக்கான நிதி அனுசரணையினை வழங்க முன் வந்துள்ளார்.
அவருக்கும்-அவரது குடும்பத்தினர்களுக்கும்-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் அருளாசி கிடைக்க வேண்டுகின்றோம்.










































































