தீவகம் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி (சின்னக்கிளி) அவர்களின் 4ம் ஆண்டு நினைவு தினம் 13.07.2016 புதன்கிழமை அன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.
அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு -அன்னாரின் கணவர் திரு உமாபதிசிவம் அவர்களின் நிதி அனுசரணையில்-அல்லையூர் இணையத்தின் அறப்பணியாளர் திரு இ.சிவநாதன் அவர்களின் மேற்பார்வையில்-கிளிநொச்சி ஜெயந்தி நகரில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் 13.07.2016 புதன்கிழமை அன்று பகல் பிரார்த்தனை நிகழ்வுடன்-மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,அன்னாரது குடும்பத்தினருடன் இணைந்து -நாமும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!
இந்நிகழ்வானது அல்லையூர் இணையம் மேற்கொண்டு வரும் 1000 தடவைகள் அன்னதானம்-என்னும் அறப்பணியின் 139 வது தடவை நடைபெற்ற-சிறப்புணவு வழங்கிய நிகழ்வாகும்.