திரு முருகேசு சிவராசா |
(ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர்) |
தோற்றம் : 4 சனவரி 1941 — மறைவு : 25 ஏப்ரல் 2016 |
தீவகம் அல்லைப்பிட்டிக் கிழக்கைச் சேர்ந்த,திருமதி சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவர் முருகேசு சிவராசா அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று யாழ் சுழிபுரத்தில் காலமானார்-அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28.04.2016 வியாழக்கிழமை அன்று சுழிபுரத்தில் நடைபெற்றது. அல்லையூர் இணையத்தினால்-பதிவு செய்யப்பட்ட-அன்னாரின் இறுதி யாத்திரையின் முழுமையான வீடியோ மற்றும் நிழற்படங்களின் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது. தகவல்-சி.நேசன் -பரிஸ்
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சிவராசா அவர்கள் 25-04-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற முருகேசு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்றவர்களான நடராசா, பொன்னுத்துரை, தேவராசா, மற்றும் இரத்தினராசா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும், சிவச்செல்வன்(வைத்தியர், கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலை- நிலாவெளி), சிவகரன்(ஜெர்மனி), சிவதர்சினி(ஆசிரியை- யா/சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை), சிவமாலினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், துஷிதா(வைத்தியர், தள ஆயுர்வேத வைத்தியசாலை- திருகோணமலை), கலாமதி(ஜெர்மனி), காண்டீபன்(ஆசிரியர்- யா/வட்டு மத்திய கல்லூரி), ஜெயபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், அபிநஜா, ஆராதனா, அகரன், ஆதிரன், வர்ஷா, ஆர்த்திகா, அக்சயன், வருணவி, வைஸ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு | ||||||
|