வேலணையைச் சேர்ந்த,பிரபல தொழில் அதிபர் சிவசரணம் குகநாதன் அவர்கள் கடந்த வருடம் திடீர் என நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்ததனால்,அவரினால் தீவக மக்களின் நலன் கருதி அல்லைப்பிட்டியில் ஆரம்பிக்கப்படவிருந்த,தொழிற்சாலைத் திட்டம் ஒன்று கிடப்பில் போடப்பட்டுள்ளதாக-அன்னாரின் நெருங்கிய உறவினர் ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தால்-தீவகத்தைச் சேர்ந்த,பல இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற்றிருப்பர் என அவர் மேலும் தெரிவித்தார்.
அமரர் சிவசரணம் குகநாதன் அவர்களினால்,யாழ்-தீவக பிரதான வீதியில் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள அலுமினியம் தொழிற்சாலையின் வெற்றுக்காணியே விலைகொடுத்து வாங்கப்பட்டிருந்ததாகவும்-நீண்ட காலமாக மக்கள் நடமாட்டமின்றி புதர்மண்டிக்கிடந்த நிலத்தினை-முதற்கட்டமாக துப்பரவு செய்திருந்த நிலையிலேயே-குகநாதன் அவர்கள் திடீர் மரணமடைந்தார் என்று மேலும் அவர் தெரிவித்தார்.
தொழில் அதிபர் சிவசரணம் குகநாதன் அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து இத்திட்டம் காலவரையின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வேலணை மத்திய கல்லூரியின் பழைய மாணவரான,அமரர் சிவசரணம் குகநாதன் அவர்கள்-வேலணை மத்திய கல்லூரிக்கும்-வேலணை மக்களுக்கும் பல உதவிகளை முன்னின்று செய்து வந்தார் என்றும் வேலணை மக்கள் நன்றியோடு தெரிவிக்கின்றனர்.