யாழ் தீவகத்தின் பிரதான வீதிக்கருகில் கோவில் கொண்டு அருள்பாலித்து வரும் -மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகப் பெருமானுக்கு மிகப்பிரமாண்டமாக முறையில் ஏழுதள இராஜகோபுரம் அமைக்கப்பட்டு வருவது நீங்கள் ஏற்கனவே அறிந்த செய்தியாகும்.
விநாயகப் பெருமானுக்கு அமைக்கப்பட்டு வரும் இராஜகோபுரத்தின் நான்காவது தளக் கட்டுமானப்பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அல்லையூர் இணையத்தினால் சில தினங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட-இராஜகோபுர கட்டுமானப்பணிகளின் தற்போதைய நிலையினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.