தாலி என்று நடிகை குஷ்பு பேசினாலே அது சர்ச்சையாகும் என்பது அனைவ ருக்கும் தெரியும். இந்த நிலையில் பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய குஷ்பு தாலி அணிவதும் அணியாமல் இருப்பதும் பெண்களின் சுதந்திரம் என்று கூறியுள்ளார்.
சென்னை பெரியார் திடலில் பெரியார் பிறந்தநாளையொட்டி யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார் என்ற தலைப்பில் மகளிர் கருத்தரங்கத்தில் குஷ்பு பேசினார்.
அப்போது பெரியாருக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்கிறது. எங்கே பிறந்து வளர்ந்தாலும் என்னுடைய சிந்தனையில் பெரியாரின் கொள் கைகள் இருந்துள்ளது.
நான் ஒரு பெரியார்வாதி. அதனால் என்னிடம் திமிரும், கொழுப்பும் அதிகமாகவே இருக்கிறது. அதே போல தாலி அணிவதும் அணியாமல் இருப்பதும் அவரவர் விருப்பம். அது பெண்களின் சுதந்திரம் என்று கூறி னார்.