தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி கோவிலின் வருடாந்த அலங்காரத் திருவிழாவினை இவ்வருடத்திலிருந்து பதினொரு தினங்கள் நடத்துவதற்கு பொதுமக்களும்-ஆலய பரிபாலன சபையும் முடிவெடுத்து -அதற்கமைய,கடந்த 22.08.2015 சனிக்கிழமை முதல் அலங்காரத்திருவிழா ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வந்ததுடன்-01.09.2015 செவ்வாய்க்கிழமை11வது நாள் திருவிழா மேலும் சிறப்பாக நடைபெற்றது.
பதினொராம் நாள் திருவிழாவின் உபயகாரர்களான….
திரு நாகராசா இராஜலிங்கம் குடும்பத்தினர்(மண்கும்பான்-பிரான்ஸ்)
திரு சோமசுந்தரம் சோமகாந்தன் குடும்பத்தினர் (மண்கும்பான்-பிரான்ஸ்)
ஆகியோரின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட- 01.09.2015 செவ்வாய்க்கிழமைஅன்று நடைபெற்ற- 11ம் நாள் அலங்காரத் திருவிழாவின்-பகல் மற்றும் இரவுக் காட்சிகளின் நிழற்படத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.