அல்லைப்பிட்டிச் சந்தியிலிருந்து பத்து மீற்றர் தொலைவிலும்( அமரர் பொன்னையாண்ணை அவர்களின் கடையிலிருந்து பத்து மீற்றர் முன் நகர்ந்தும்) ஊருக்குள் செல்லும் பிரதான வீதியில்-புதிதாக ஒரு பாலம் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிய வருகின்றது.
யாழிலிருந்து,ஊர்காவற்றுறை வரை-அமைக்கப்பட்டு வரும் காபட் வீதியின் தெற்குப் பகுதியில் மழைக்காலங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரினை வெளியேற்றுவதற்காகவே இப்பாலம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளதாக எமது வாசகர் ஒருவர் அறியத்தந்துள்ளார்.