யாழ் தீவகம் புளியங்கூடல் பகுதியில் அமைந்துள்ள செருத்தனைப்பதி அருள்மிகு ஸ்ரீ இராஜமகாமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் 12.06.2015 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
பதினாறு தினங்கள் தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெறுவதுடன் முக்கிய திருவிழாக்களாக-24.06.2015 அன்று கைலாசவாகனத்திருவிழாவும்-26.06.2015 அன்று சப்பறத் திருவிழாவும்-27.06.2015 சனிக்கிழமை அன்று தேர்த்திருவிழாவும்-மறுநாள் 28.06.2015 ஞாயிறு அன்று தீர்த்தத்திருவிழாவும் இடம்பெறுமென தெரிய வருகின்றது.
தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மகாமாரியின் திருவிழாவுக்கு நாட்டின் பல பாகங்களிலிருந்தும்-வெளிநாடுகளிலிருந்தும் பெருமளவான பக்தர்கள் வந்தவண்ணமுள்ளதாக மேலும் தெரிய வருகின்றது.
நந்தியும்,பலிபீடமும் இல்லாத புதுமையான ஆலயமாக செருத்தனைப்பதி அருள்மிகு ஸ்ரீ இராஜமகாமாரி அம்மன் காட்சிதருவதாக பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது.
நிழற்படங்கள்-திரு I.சிவநேசன்-வேலணை