வீரகேசரி வாரமலரில் வெளியான-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களுடனான-சிறப்பு நேர்காணல்..

வீரகேசரி வாரமலரில் வெளியான-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களுடனான-சிறப்பு நேர்காணல்..

வீரகேசரி வாரமலரில்  07.06.2015  பதிப்பில் வெளியான-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களுடனான-சிறப்பு நேர்காணல்…..கீழே இணைக்கப்பட்டுள்ளது.

“இன்­றைய சூழலில் மொழிப்­பு­லமை மிகக்­ குறை­வு’
கலா­நிதி செல்­லையா திரு­நா­வுக்­க­ரசுடனான நேர்­கா­ணல்…

கோப்பாய் ஆசி­ரிய பயிற்­சிக்­க­லா­சா­லையின் ஓய்வு பெற்ற உப அதி­ப­ரான பண்டிதர் கலா­நிதி. செல்­லையா திரு­நா­வுக்­க­ரசு அல்­லைப்­பிட்­டியில் 1950ஆம் ஆண்டு பிறந்­தவர்.

கலை இலக்­கிய விமர்­ச­க­ரா­கவும், எழுத்­தா­ள­ரா­கவும், பேச்­சா­ள­ரா­கவும், பல்­துறை ஆளுமை கொண்­ட­வ­ராக விளங்­கு­கின்ற அவரை வீரகேசரி சங்­க­மத்­திற்­காகச் சந்­தித்தோம்.

கேள்வி:- தங்­களின் குடும்­பப்­பின்­னணி தமி­ழியல் ஈடு­பாட்டை உங்­க­ளுக்கு உரு­வாக்­கி­யதா?
நான் அல்­லைப்­பிட்­டியில் ஒரு விவ­சா­யக்­கு­டும்­பத்தில் பிறந்­தவன். எனது தாய் தந்­தை­யர்கள் பெரி­ய­ளவில் இலக்­கிய ஈடு­பாடு உடை­ய­வர்கள் என்று சொல்ல இய­லாது. ஆனால், எனது பாட்­ட­னார்கள் நாட்­டுக்­கூத்து, புரா­ண­ப­டனம், திரு­முறை ஓதல் ஆகி­ய­வற்றில் மிகுந்த ஈடு­பாடு கொண்­ட­வர்கள். எனக்குள் ஒரு வகையில் தமிழ் சார் உணர்­வி­யலை உரு­வாக்­கி­யதில் இந்த பேர­னார்­களின் பங்கே பெரி­யது.

கேள்வி-: அவ்­வா­றாயின் பாட­சாலை, பல்­க­லைக்­க­ழகம் வாயி­லா­கவா தாங்கள் இலக்­கிய உணர்வு பெற்­றீர்கள்?
அவ்­வாறு சொல்லி விட இய­லாது. நான் கற்­ற­தெல்லாம் அல்லைப்பிட்டியிலும்,வேல­ணை­யி­லுமே. அதுவும் குடும்ப வறு­மையால் பதி­னாறு வயது வரை மட்­டுமே கல்வி கற்றேன். அத­னுடன் பாட­சா­லைக்­கல்வி நின்று விட்­டது. ஆனால், அக்­கா­லத்தில் அல்­லைப்­பிட்­டியில் வாழ்ந்த க.வ.ஆறு­முகம் என்­பவர் ஒரு முன்­னோடி எழுத்­தாளர். அவர் தான் எனக்கு வாசிப்பு ஆர்­வத்தை தூண்­டினார். நான் அதிகம் வாசித்­ததில் அவ­ரது பங்கு பெரிது. அது மட்­டு­மன்றி 06,07 நாட­கங்­க­ளிலும் என்னை நடிக்க வைத்தார்.

கேள்வி:- பதி­னாறு வயதில் பாட­சா­லை­யி­லி­ருந்து இடை வில­கிய தாங்கள் எப்­படி கல்வி நிர்­வாக சேவையில் உள்­வாங்­கப்­பட்­டீர்கள்?
இதற்கு நீண்ட பதில் சொல்ல வேண்டும். நான் பாட­சா­லை­யி­லி­ருந்து இடை விலகி ஓராண்டு விவ­சாயம் செய்தேன். அடுத்த ஓராண்டு பல நோக்குக் கூட்­டு­ற­வுச்­சங்­கத்தில் சிற்­றூ­ழி­ய­ராக வேலை செய்தேன். பிறகு பதிவு செய்­யப்­பட்ட உத­வித்­தபால் ஊழி­ய­ராகச் சில காலம் இருந்தேன்.
பிறகு ஆறு ஆண்­டுகள் இலங்கை போக்­கு­வ­ரத்­துச்­சபைப் பேருந்தில் நடத்­து­ன­ராகப் பணி­பு­ரிந்தேன். இந்த ஆறாண்டில் தான் உயர்­தரம் கற்று சித்தி பெற்­ற­துடன், பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் வெளி­வாரி பட்­டப்­ப­டிப்பை பூர்த்தி செய்தேன். நான் நினைக்­கிறேன் அந்­தக்­கா­லத்தில் இலங்­கையில் ஒரு பட்­ட­தாரிப் பேருந்து நடத்­து­ன­ராக நானே இருந்­தி­ருப்பேன்.
இதன் பின்­ன­ணியில் 1985இல் ஆசி­ரிய நிய­மனம் கிடைத்­தது. இரண்டு மூன்று பாட­சா­லை­களில் கற்­பித்தேன். யாழ். இந்­துக்­கல்­லூ­ரியில் கற்­பிக்­கிற போது, சேவைக்­கால ஆசி­ரிய ஆலோ­ச­க­ராகப் பதவி உயர்வு கிடைத்­தது. பிறகு, கோப்பாய் ஆசி­ரிய பயிற்­சிக்­க­லா­சா­லையில் இணைக்­கப்­பட்ட விரி­வு­ரை­யா­ள­ராக மாறினேன். 2000ஆம் ஆண்டில் தான் கல்வி நிர்­வாக சேவைக்குள் உள்­வாங்­கப்­பட்டு, விரி­வு­ரை­யா­ள­ராக மாறினேன்.
இதற்குள் தமி­ழிலும், முகா­மைத்­து­வத்­திலும், கல்­வி­யி­ய­லிலும் பல்­வேறு கற்கை நெறி­களை மேற்­கொண்டு முது­கலை, இளங்­கலை, பட்­டங்கள் பல­வற்றை பல்­க­லைக்­க­ழ­கத்தில் பெற்­றி­ருந்தேன். அதனை விட, தமிழில் கலா­நி­திப்­பட்ட ஆய்­வையும் செய்து யாழ்ப்­பா­ணப்­பல்­க­லைக்­க­ழ­கத்தில் “கலா­நிதி” பட்­டமும் கிடைத்­தது. இவற்­றுக்கு அப்பால், பண்­டிதர், சைவப்­பு­லவர் பட்ட தேர்­வு­க­ளிலும் சித்தி பெற்றேன். இவ்­வாறு நான் பத்­து­பட்­டங்­களை படித்துப் பெற்றேன்.

கேள்வி-:- நீங்கள் ஒரு விரி­வு­ரை­யாளர் என்­ப­தற்கு அப்பால் ஒரு எழுத்­தா­ள­ராக எதனை செய்­தி­ருக்­கி­றீர்கள்?
எனது முத­லா­வது கவிதை 1972இல் சுதந்­திரன் பத்­தி­ரி­கையில் வெளி­யா­னது. அன்று முதல் இன்று வரை நூற்­றுக்­க­ணக்­கான கவி­தை­களை எழு­தி­யுள்ளேன். ஏரா­ள­மான கட்­டு­ரை­களை வரைந்­துள்ளேன். அவற்றில் சில­வற்றைத் தொகுத்து மூன்று நூல்கள் வெளி­யிட்­டுள்ளேன். டானி­யலின் எழுத்­துக்கள் (2004), எண்­ணங்­களும் வண்­ணங்­களும் (2011), எண்­ணங்­களும் எழுத்­துக்­களும் (2012) என்­பன அவை­யாகும். இந்­நூல்­க­ளுக்குக் கூட, வட­கி­ழக்கு சாகித்­திய பரிசு, இலங்கை இலக்­கியப் பேர­வைப்­ப­ரிசு, தமி­ழியல் விருது என்று பல விரு­துகள் கிடைத்­துள்­ளன.
இதனை விட, இன்னும் நிறைய பாடத்­திட்ட நூல்கள் எழு­தி­யுள்ளேன். இரண்டு நூல்­களைப் பதிப்­பித்­தி­ருக்­கிறேன்.
இன்னும் எழுதி வரு­கின்றேன். வரும் வாரத்தில் கூட, எனது பத்தாம் பதி­னோராம் வகுப்­பு­க­ளுக்­கான தமி­ழி­லக்­கியத் தொகுப்பு வெளி­வ­ர­வுள்­ளது. இதனை விட, நிறைய விமர்­ச­னங்­களை வரைந்­துள்ளேன்.

கேள்வி-:- நீங்கள் படித்துப் பெற்­றவை தவிர, கௌர­வங்கள், பட்­டங்கள் பற்றிக் குறிப்­பி­டுங்கள்?
நிறைய கிடைத்­துள்­ளன. அவை கள் பற்றிச் சொல்­வ­தென்றால், வேலணை, நல்லூர் பிர­தேச செய­ல­கங்­களால் முறையே கலை­வா­ரிதி, கலை­ஞா­னச்­சுடர் என்ற பட்­டங்கள் தரப்­பட்­ட­தையும், சென்ற ஆண்டு 2013 கலா­பூ­ஷணம் கிடைத்­த­தையும் வேண்­டு­மென்றால் சொல்­லலாம்.

கேள்வி-:- இன்­றைய இலக்­கிய உலகு பற்றி என்ன நினைக்­கி­றீர்கள்?
– வாசிப்­புப்­ப­ழக்கம் குறைந்­தி­ருக்­கிற இன்­றைய சூழலில் மொழிப்­பு­லமை மிகக்­கு­றைவு. மொழிக்­கை­யா­ளு­கையில் பலரும் நிறைய பிழை விடு­கி­றார்கள். கல்­விக்­கூ­டங்­களில் பட்­டங்­களைப் பெற்று வரு­ப­வர்கள் பல­ருக்கும் தமிழை சரி­யாகப் பயன்­ப­டுத்தத் தெரி­ய­வில்லை. அதனை விட, பிறரைப் பாராட்டும் பண்பு குறைவு. பதவி மோகம் அதிகம். இந்த அளவில், இந்நாட்டு இலக்கிய உலகு திருப்தி தருவதாக இல்லை.

கேள்வி-:- எழுத்துத் துறையில் உங்களின் எதிர்காலத்திட்டம் என்ன?
இப்போதைக்கு தமிழ் சினிமா வில் மிக முக்கிய பங்காற்றிய தமிழ்ச் சினிமாக் கவிதையின் பிதாமகர், பகுத்தறிவுக்கவிஞர் உடுமலை நாராயணகவி பற்றி விரிவாக ஆய்வு செய்து வருகிறேன். அது நிறைவு
பெறும் நிலையில் உள்ளது. பழந்தமிழ்ச்சினிமாவில் பெரும் பணி செய்த அவரை இளந்தலை முறைக்கும் அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

தி.மயூரகிரி

w-331VK20140525

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux