தீவகம் புங்குடுதீவு கிழக்கு கண்ணகைபுரம் அருள்மிகு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் (கண்ணகை அம்மன்) ஆலயத்தின் வருடாந்த,மகோற்சவம் 19-04-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று-02-05-2015 சனிக்கிழமை அன்று காலை கண்ணகை அம்மன் தேரேறி வீதியுலா வந்த கண் கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றது.
புலம் பெயர்ந்த,நாடுகளிலிருந்தும்-இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பல நூற்றுக்கணக்கான மக்கள் தோ்த்திருவிழாவில் கலந்து கொண்டு-அம்மனின் அருள் வேண்டி நின்றதனை பார்க்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்முறை அம்மனின் பட்டுச்சேலை அதி உச்ச விலையாக ஒரு லட்சம் ரூபாக்கள் வரை ஏலத்தில் விற்கப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-தேர்த்திருவிழாவின் நிழற்படத் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
நிழற்படப்பிடிப்பு….
திரு I.சிவநேசன்-வேலணை
படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!