புது வருடத்தினை முன்னிட்டு-பரிசில் அமைந்துள்ள -ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.பரிசிலும்,பரிசின் புறநகர் பகுதிகளிலும் வசிக்கும் பல நூற்றுக்கணக்கான மக்கள் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாடுகளில் பக்திபூர்வமாக ஈடுபட்டதனை காணக்கூடியதாக இருந்தது.
தமக்கு பிறக்கின்ற 2015 ஆம் ஆண்டு நன்மை தர வேண்டும் என்றே,ஆண்டின் முதல் நாள் அன்று முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு வந்து அம்மனை தரிசித்துச் சென்றனர்.
அன்னதான நிகழ்வு
கடந்த பல வருடங்களாக- புதுவருடத்தன்று அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு விசுவலிங்கம் பிரபா( அப்பன்)அவர்களினால் வருகின்ற அனைவருக்கும் சிறப்பாக அன்னதானம் வழங்கப்பட்டு வருகின்றது.ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்கள் அனைவரும்-சாமிதரிசனம் முடித்த பின்னர் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து வயிறாற உணவுண்டு செல்வதனை நேரடியாக காணமுடிந்தது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.