அல்லைப்பிட்டி சிந்தாமணிப்பிள்ளையாரை,அழிவிலிருந்து காப்பாற்றும் நோக்கோடு-அல்லையூர் இணையத்தினால் முதற்கட்டமாக திரட்டப்பட்ட -ஒரு இலட்சம் ரூபாக்களினை கடந்த 25-12-2014 அன்று நடைபெற்ற-விநாயகர் சதுர்த்தி பொங்கல் விழாவின் போது பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் மேற்பார்வையில்
அனுப்பப்பட்ட நிதியினை-ஆலய நிர்வாகத் தலைவர் திரு இராசப்பா கேதாரநாதன் அவர்கள் ஆலய பொருளாளரான செல்வன் தனபாலசிங்கம் ஜனகன் அவர்களிடம் ஒப்படைதார்.இந்நிதி ஆலய புனரமைப்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்லையூர் இணையத்தினால் முதற்கட்டமாக-அனுப்பிவைக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாக்களை வழங்கிய,
அமரர் செல்லத்துரை வேலாயுதபிள்ளை குடும்பத்தினர்-50.000 ஆயிரம்
அமரர் வாமதேவன் குடும்பத்தினர்-50.000 ஆயிரம்-
ஆகியோருக்கு ஆலய நிர்வாகத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.