அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு,திருமதி இராஜலிங்கம் அம்பிகாதேவி தம்பதிகளினால் சுவிஸ் சூரிச் மாநகரில் நடத்தப்பட்டு வரும் கண்ணகி கல்வி நிலையத்தின் 17ஆவது ஆண்டு விழா கடந்த மாதம் 15-11-2014 சனிக்கிழமை அன்று சுவிஸ் சூரிச்சில் அமைந்துள்ள மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் ஆசிரியர்கள்-மாணவர்கள்-பொதுமக்கள் என அதிகமானோர் கலந்து கொண்டதுடன்-கண்ணகி கல்வி நிலைய மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது-
இவ்விழாவில் பங்கு பற்றிய கண்ணகி கல்வி நிலைய மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் விழாவில் சேர்க்கப்படும் நிதியினை-வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக அனுப்பி வருவது -இவ்விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக குறிப்பிடப்படுகின்றது.
அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திரு கிஸ்ணபிள்ளை இராஜலிங்கம் அவர்கள்-அல்லையூர் இணையத்தினால் மேற் கொள்ளப்பட்டு வரும் அறப்பணிகளுக்கும்-அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள ஆலயப்பணிகளுக்கும் முன்னின்று உதவி வருபவர் என்பதுடன்-வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் (மகாதேவா ஆச்சிரமம்) உட்பட தொடர்ந்து உதவி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.