அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் வருடாந்த ஒளிவிழா-02-12-2014 செவ்வாய்க்கிழமை அன்று பாடசாலை அதிபர் திரு கே.பத்மநாதன் அவர்களின் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அல்லைப்பிட்டி பங்குத்தந்தை எம்.பத்திநாதர் அவர்களின் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
இவ்வொளி விழாவில் பங்குத்தந்தை எம்.பத்திநாதர் மற்றும்
அல்லைப்பிட்டி மெதடிஸ்த திருச்சபையின் அருட்சகோதரன் மா.நவரட்ணராஜா மற்றும்
றோமன் கத்தோலிக்க வித்தியாலய அதிபர் என். பத்மநாதன் மற்றும் பெரியவர் அல்பிரட் ஜோர்ஜ் ,பெரியவர் அருளப்பு மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.