மண்கும்பானைச் சேர்ந்தவரும்-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய திருப்பணிகளுக்கு பேருதவி புரிந்து வந்தவரும்-இலங்கையில் பிரபலமான யாழ்ப்பாணம் லலிதா ஜுவல்லரி மற்றும் கொழும்பு ராணி ஜுவல்லரி ஆகிய நகைமாடங்களின் முன்னாள் உரிமையாளரும்-சமாதான நீதாவானுமாகிய,திரு செல்லையா இந்திரசித்து அவர்கள்-லண்டனில் The Royal London Hospital இல் இருதய அவசர சத்திரசிகிச்சைப் பிரிவில் E3இல் அனுமதிக்கப்பட்டுள்ளார்-
என்பதனையும் அவர் பூரண நலமடைய, எல்லாம் வல்ல மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரை,அவர் நலம் விரும்பும் பிள்ளையார் பக்தர்களுடன் இணைந்து நாமும் வேண்டி நிற்கின்றோம்.