அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த,திரு சங்கரப்பிள்ளை ஞானலிங்கம்(பிரான்ஸ் )அவர்களின் அன்பு மாமியார்(மனைவியின் தாயார்)திருமதி செந்தமிழ்செல்வி கதிர்காமநாதன் அவர்கள்18-10-2014 அன்று யாழ் நல்லூரில் காலமானார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 20-10-2014 திங்கட்கிழமை அன்று யாழ் நல்லூரில் நடைபெற்றது-திரு சங்கரப்பிள்ளை ஞானலிங்கத்தின் வேண்டுகோளின் பேரில் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட வீடியோப்பதிவினை கீழே இணைத்துள்ளோம்.
யாழ். வேலணை சரவணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், யாழ். நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட செந்தமிழ்செல்வி கதிர்காமநாதன் அவர்கள் 18-10-2014 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நீலாட்சியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், பொன்னம்மா அவர்களின் பெறாமகளும், கதிர்காமநாதன் அவர்களின் அன்பு மனைவியும், சுகந்தினி(யாழ். நல்லூர்), விமலன்(சுவிஸ்), செந்தூரன்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும், சிவகுமாரி(இந்தியா), முருகானந்தன்(சுவிஸ்), சிவானந்தன்(ஜெர்மனி), சந்திரகுமாரி(கனடா), வித்தியானந்தன்(கனடா), நித்தியானந்தன்(கனடா), வசந்தகுமாரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், அமிர்தகௌரி, சச்சிதானந்தம், ஆனந்தகௌரி, சண்முகானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும், ஞானலிங்கம், ஸ்ரீப்பிரியா, தினேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும், கிஷாயினி, விதுஷிகா, நிதுஷன், அகஸ்ரியன், ஆதிசன், ஹிருசிகன், அனுர்த்தன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 20-10-2014 திங்கட்கிழமை அன்று யாழ் நல்லூரில் நடைபெற்றது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
|