யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்காவற்றுறை வரை நீண்டு செல்லும் தீவக பிரதான வீதியினை- அகலப்படுத்தி காபட் வீதியாக மாற்றும் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகின்றது.
அதி உயர் தொழில் நுட்பத்துடன் கனரக இயந்திரங்களின் துணையுடன் இவ்வீதி அகலப்படுத்தப்படும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
21 மாத கால ஒப்பந்த அடிப்படையில் அமைக்கப்பட்டு வரும் இவ்வீதியின் அகலப்படுத்தும் பணிகள் இவ்வருடக் கடைசியில் நிறைவு பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது மண்டைதீவுச்சந்தியிலிருந்து யாழ் செல்லும் பிரதான வீதியில் பாலம் ஒன்று அமைக்கப்படுவதனை – உங்கள் பார்வைக்கு கீழே நிழற்படங்களாக இணைத்துள்ளோம்.
ஊர்காவற்றுறை வரை அமைக்கப்படும் காபட் வீதியின் பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும்-யாழ் பண்ணையிலிருந்து-அல்லைப்பிட்டி சந்தி வரை 8 நிமிடங்களில் கடந்து விடமுடியும் என்று அல்லைப்பிட்டியில் அமைக்கப்பட்டுள்ள hotel இன் விளம்பரம் ஒன்று தெரிவிக்கின்றது.