கடந்த வியாழக்கிழமை 31.07.2014 அன்று இரவு மண்கும்பான் செட்டிகாடு ஶ்ரீ ஞான வைரவர் ஆலயத்தினுள் புகுந்த விஷமிகள் ஆலயத்திற்குள் இருந்த விளக்குகளை அடித்து நொருக்கியதுடன்- அங்கிருந்த சூலம் விக்கிரகங்கள் முதலியவற்றைத் திருடிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
அண்மைக்காலங்களில் இந்து ஆலயங்களில் உள்ள விக்கிரகங்கள் திருடப்படுவதும் ஆலய சொத்துகளுக்கு சேதம் விளவிப்பதும் தொடர்ந்து வருவதாக மக்கள் கவலை கொண்டுள்ளனர்.
மண்கும்பான் மக்களால் காலங்காலமாக பக்தியோடும் படையலோடும் பலி கொடுக்கப்பட்டு வழிபடுகின்ற-செட்டிகாடு ஸ்ரீ ஞானவைரவரின் ஆலயத்திற்குள் புகுந்து சேதம் விளைவித்தவர்களுக்காக நாம் வெளியிடும் சில படங்கள் இவை….
மண்கும்பான் ஸ்ரீ ஞான வைரவா-இதோ எங்கள் காணிக்கை…
இந்து ஆலயங்களை திட்டமிட்டுச் சிதைப்பவர்களை அடையாளம் காட்டுவதற்காக நாம் உனக்கு தரும் காணிக்கையினை ஏற்று -சதிகாரர்களை உடனே அடையாளம் காட்டு…..