மண்கும்பான் கிழக்கைச் சேர்ந்த,திரு-திருமதி நடராஜா செல்வராணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்-மண்டைதீவைச் சேர்ந்த,காலஞ்சென்ற தருமநாயகம் ( தருமு) திருமதி தருமநாயகம் பஞ்சரட்ணம் தம்பதிகளின் அன்புப் பேத்தியுமாகிய,செல்வி சிறீதரன் சிந்துஜா அவர்களின் பூப்புனித நீராட்டு விழா வைபவம்- 08-06-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிசில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நட்புரீதியாக திரு சிறீதரன் அவர்கள் விடுத்த வேண்டுகோளின் பேரில் -அல்லையூர் இணையம் மிகக்குறைந்த தொழில்நுட்பத்துடன் பதிவு செய்த -வீடியோ இணைப்பினை உலகமெல்லாம் பரந்து வாழும் உறவினர்களின் பார்வைக்காக சமர்ப்பிக்கின்றோம்.
அறப்பணிச்சிறப்பு
தமது அன்புப் புதல்வியின் பூப்புனித நீராட்டு விழாவினை சிறப்பாக நடத்தி அழகு பார்த்த தம்பதிகளான திரு திருமதி சிறீதரன் சுபாஜினி அவர்கள்-அன்றைய நாளில் வன்னியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினை தத்தெடுத்து அவர்களுக்கான நிதியினை வழங்கியிருந்ததுடன்-அதற்கான ஆதாரத்தினை -மேடையில் வைத்து திரு அரியம் மாஸ்ரர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட நிகழ்வு- பூப்புனித நீராட்டு விழாவிற்கு மேலும் தனிச்சிறப்பு சேர்த்ததுடன்-இப்படியான கொண்டாட்டங்களை நடத்தும் எம்மவர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் ,முன்னுதாரணமாகவும் இருந்தது.
செல்வி சிறீதரன் சிந்துஜா அவர்களின் பூப்புனித நீராட்டு விழாவின் வீடியோப்பதிவினை பகுதி-01 பகுதி -02 என இரண்டு பிரிவாக கீழே இணைத்துள்ளோம் என்பதனை அறியத்தருகின்றோம்