அன்னார் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சரஸ்வதி தம்பதியரின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் அன்னலட்சுமி தம்பதியரின் மருமகளும், வரதராசாவின் அன்பு மனைவியும், வசிகரன், வசிகஜன், கஜிபன் (கஜமுகன் மல்ரி சொப் வங்களாவடி),காணுசன் (வேலணை மத்திய கல்லூரி மாணவன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் கஜராஜியினி (மாநகரசபை யாழ்ப்பாணம்), ஜெயந்தி (யாழ்.பல்கலைக்கழகம், இறுதியாண்டு) ஆகியோரின் மாமியும், ரஷ்மினா,ரஷ்சகன் ஆகியோரின் பேர்த்தியும், தவமணி, காலஞ்சென்றவர்களான சுலோசனாதேவி,மதிவதனி மற்றும் காந்தரூபன், மதியழகி ஆகியோரின் சகோதரியும் காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், றாதா, றங்கன் மற்றும் விமலநாதன், அகிலநாதன், சசிகலா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (23.05.2014) வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக சாட்டி செம்படவை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர். |
|||
|
|||
|
காலமான திருமதி வரதராசா மணிமேகலை அவர்கள்-விரைவில் நடைபெறவுள்ள-தனது மகனின் திருமண விழாவில் கலந்து கொள்ள வருமாறு -வன்னியில் உள்ள உறவினர்களுக்கு (21-05-2014 )அன்று அழைப்பிதழ் கொடுத்து விட்டு-மோட்டார் சைக்கிளில் தனது மகனுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் சிக்கி தலையில் படுகாயமடைந்து மரணமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை உங்களின் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.