யாழ் தீவகத்தின் பல கிராமங்களில் ஏற்பட்டுள்ள குடிதண்ணீர் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கோடு-வேள்ட் விஷன் என்னும் உதவி வழங்கும் நிறுவனம் இரண்டு தண்ணீர் பவுசர்களை-வேலணை பிரதேச செயலகத்திற்கு வழங்கியுள்ளது
இந்தப் பவுசர்களைப் பெற்றுக் கொண்ட பிரதேச செயலகம்-உடனடியாகவே தீவகத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள புங்குடுதீவு மற்றும் மண்டைதீவு பகுதிகளுக்கு இலவச குடிநீர் விநியோகத்தினை மேற் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.