அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் வருடாந்த-அலங்காரத் திருவிழா 04-04-2014 வெள்ளிக்கிழமை அன்று ஆரம்பமாகி தொடர்ந்து ஒன்பது தினங்கள் திருவிழா சிறப்பாக நடைபெற்று -பத்தாவது நாளாகிய 13-04-2014 ஞாயிறு அன்று பகல் முருகப்பெருமானுக்கு சங்காபிஷேகம் நடைபெற்று – இரவு ஆறு மணிக்கு திருக்கல்யாணமும் திருவூஞ்சலும் இடம் பெற்று முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதராய் வீதியுலா வந்த திருக்காட்சியும் இடம்பெற்றது.
13-04-2014 ஞாயிறு பகல் நடைபெற்ற-திருவிழாவின் படங்களை ஏற்கனவே பதிவு செய்திருந்தோம்-அன்றைய தினம் இரவு நடைபெற்ற-திருக்கல்யாணம்-திருவூஞ்சல் ஆகியவற்றின் எமக்கு கிடைக்கப்பெற்ற-நிழற்படங்களை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.