புலம்பெயர் அல்லைப்பிட்டி மக்களின் நிதியினால் புனரமைக்கப்பட்ட மதகு-படங்கள் தகவல்கள் இணைப்பு!

புலம்பெயர் அல்லைப்பிட்டி மக்களின் நிதியினால் புனரமைக்கப்பட்ட மதகு-படங்கள் தகவல்கள் இணைப்பு!

SAMSUNG CAMERA PICTURES

அல்லைப்பிட்டி வடக்கு பிரதான வீதியிலிருந்து-பழைய அலுமினியம் தொழிற்சாலைக்கு கிழக்குப் பக்கமாக ஊர்மனைக்குள் ஊர்ந்து செல்லும் வீதியின் தொடக்கத்தில் இணைக்கப்பட்டிருந்த மதகு நீண்ட காலமாக முழுமையாக உடைந்த நிலையில் காணப்படுவதினால் இப்பாதை ஊடாக வாகனங்கள் பயணம் செய்வது முடியாத காரியமாக உள்ளது நீங்கள் அறிந்ததே!

அத்தோடு  நீண்டகாலமாக புனரமைக்கப்படாத காரணத்தால் இதனூடாகச் செல்லும் வீதியும் மிக மோசமாக பழுதடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும் . எனவே அல்லையூர் இணையத்தின் ஆதரவுடன்-புலம் பெயர் அல்லைப்பிட்டி மக்களை ஒன்றுசேர்ந்து இந்த வீதியையும்-இடையில் உடைந்து கிடக்கும் மதகையும் திருத்தி இப்பகுதி மக்களின் சீரானபோக்குவரத்துக்கு வளியமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற  உயர்ந்த நோக்கோடு-ஜெர்மனியில் வசிக்கும் திரு தில்லையம்பலம் கண்ணன் ( தனுஜா)அவர்கள் முன் வந்திருந்தார்கள்.

அல்லைப்பிட்டி மக்களின் மதிப்புக்குரியவராகத் திகளும்  சமூக ஆர்வலர் திரு சோமசுந்தரம் மகேஸ்வரநாதன்  அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்ற-இப்பணிகளின் ஒருபகுதி நிறைவடைந்துள்ளதாகவும்-தொடர்ந்தும் வேலைகள் நடைபெறவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES 1543901_1436504519912112_1639331122_n 1503528_1436504263245471_907519709_n 1493078_1436504286578802_1091332418_n 1476920_1426660674229830_1814041546_n1

SAMSUNG CAMERA PICTURES

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux