அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-அமரர் I.R.J.அலெக்சாண்டர் அவர்களின் 32வது நினைவுதினத்தை முன்னிட்டு-அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-அமரர் அலெக்சாண்டர் அவர்களின் புதல்வரின் நிதி அனுசரணையில்-27-02-2014 வியாழக்கிழமை அன்று யாழ் கைதடியில் அமைந்துள்ள விழிப்புலன் இழந்தோரின் இல்லத்தில்-பிரார்தனை நிகழ்வுடன் சிறப்பு உணவும் வழங்கப்பட்டது-இந்நிகழ்வில் அமரர் அலெக்சாண்டரின் உறவினர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அன்பும் பண்பும் பாசமுமாய் எம்மை வளர்த்து
கண்ணின் கருமணி போல் எம்மைக் காத்து
எண்ணற்றோர் வாழ்வினிலே-இருள் அகற்றி ஒளி ஏற்றி
எம்மை அன்புடனே வளர்த்த எங்கள் அப்பாவே!
அல்லையூர் மக்களின் மனங்களிலே-என்றும்
நீங்காமல் நிலைத்து நிற்பவரே!
நீங்கள் எங்களை விட்டுப் பிரிந்து
முப்பத்திரெண்டு ஆண்டுகள் மறைந்தாலும்
என்றும் எங்கள் உள்ளத்திலே வாழ்ந்து வருகின்றீர்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி உத்தரிய கார்மேல் அன்னையிடம்
மன்றாடி நிற்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும்-
மனைவி
பிள்ளைகள்-மருமக்கள்
பேரப்பிள்ளைகள்
தகவல்-மகன் றெஜி-கனடா