அல்லையூர் இணையத்தின் ஆதரவில்-புலம்பெயர் எம் கிராமத்து மக்களின் நிதிப்பங்களிப்புடன்-வன்னியில் அமைந்துள்ள மகாதேவா ஆச்சிரம மாணவர்களுக்காக- தைப்பொங்கல் விழா மிகச்சிறப்பாக நடத்தப்பட்டது. இப்பொங்கல் விழாவிற்காக-அல்லையூர் இணையத்தினால் திரட்டப்பட்ட-93 ஆயிரம் ரூபாக்களை -பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் மேற்பார்வையின் ஊடாக மகாதேவா ஆச்சிரம நிர்வாகத்திடம் ஒப்படைத்திருந்தோம்.
அல்லையூர் இணையத்தின் சார்பில் பொங்கல் விழாவினை சிறப்பாக நடத்துவதற்காக-மண்டைதீவு அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்குரியவராக திகளும் திரு எஸ் .வசந்தரூபன் அவர்களுடன்-இணைந்து -இளைஞர்களான-மகேஸ்வரநாதன் கிருசன் மற்றும் சாந்தலிங்கம் தர்சன் ஆகிய இருவரும்-கடும் மழையையும் பொருட்படுத்தாது முதல்நாள் மாலை சென்று மகாதேவா ஆச்சிரமத்தில் தங்கி நின்று பொங்கல் விழாவினை சிறப்பாக நடத்தி முடித்து திரும்பியிருந்தனர்-இவர்களுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மகாதேவா ஆச்சிரமத்து மாணவர்களின் முகங்களில் புன்னகை பொங்க-தமது மனங்களில் கருணை பொங்கி 93 ஆயிரம் ரூபாக்களை வழங்கிய…….
எமது வணக்கத்துக்குரியவர்கள்
அமரர் செல்லத்துரை தவவிநாயகம் அவர்கள்
அமரர்கள் திரு திருமதி இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி தம்பதியினர்
எமது நன்றிக்குரியவர்கள்
01-திரு தவவிநாயகம் சந்திரகுமார்-பிரான்ஸ்
02-திரு ஏரம்பு வேலும்மயிலும்-பிரான்ஸ்
03-திரு இரத்தினசபாபதி யோகநாதன்-பிரான்ஸ்
04-திரு கதிர்காமு மோகனசுந்தரம்-பிரான்ஸ்
05-திரு தில்லையம்பலம் கிருபாகரன் (தனுஜா)-ஜெர்மனி
06-திரு குலசேகரம்பிள்ளை சிறிஸ்கந்தராஜா-பிரான்ஸ்