இரண்டாயிரம் (2000)தடவைகளைத் தொட்ட அன்னதானப்பணியும்,அன்னை சிவகாமிப்பிள்ளை முதியோர் இல்ல கட்டிட நிதியும்-பாருங்கள்!

இரண்டாயிரம் (2000)தடவைகளைத் தொட்ட அன்னதானப்பணியும்,அன்னை சிவகாமிப்பிள்ளை முதியோர் இல்ல கட்டிட நிதியும்-பாருங்கள்!

சிவா அன்னதானஅறக்கட்டளை (அல்லையூர் அறப்பணிக் குடும்பம்) ஊடாக,புலம்பெயர் நாடுகளில் வசிக்கும்,கருணை உள்ளங்களின் நிதி அனுசரணையில், முன்னெடுக்கப்பட்டு வந்த அன்னதானப்பணியானது,தற்போது 2000 தடவைகளை கடந்து தினமும் இடம்பெற்று வருகின்றது.

இப்பணியின் அடுத்த கட்ட வளர்ச்சியாக,யாழ் தீவகத்தில் முதியோர் இல்லம் ஒன்றை அமைக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இக்கட்டிட நிதிக்கான அனுசரணையினை,உள்ளூரிலும்,புலம்பெயர் நாடுகளிலும்,வசிக்கும்-கருணை உள்ளங்களிடம் இருந்து எதிர்பார்த்து நிக்கின்றோம்.

கருணை உள்ளங்களினால் 30 லட்சம் ரூபாக்கள் வரை வழங்கப்பட்டுள்ளது-என்பதனை நன்றி கலந்த மகிழ்ச்சியோடு அறியத்தருவதுடன், நீங்களும்,உங்களால் முடிந்த நிதியினை வழங்கி,தீவகம் மண்கும்பானில் அமையவுள்ள,அன்னை சிவகாமிப்பிள்ளை முதியோர் இல்ல கட்டிடத்திற்கு உரமாவீர்கள் என நம்பி நிற்கின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux