யாழ் மண்டைதீவைச் சேர்ந்த, அமரர் சிவப்பிரகாசம் சிவசிறிகுமரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

யாழ் மண்டைதீவைச் சேர்ந்த, அமரர் சிவப்பிரகாசம் சிவசிறிகுமரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

சுவிஸில் காலமான,யாழ் மண்டைதீவைச் சேர்ந்த,சமூக ஆர்வலர் அமரர் சிவப்பிரகாசம் சிவசிறிகுமரன் அவர்களின் மூன்றாம் ஆண்டுத் திதி 19.10.2021 செவ்வாய்க்கிழமையாகும்.

அன்னாரின் ஆண்டுத்திதியை முன்னிட்டு,சிவா அன்னதான அறக்கட்டளையின் ஏற்பாட்டில்,அமரர் சிவப்பிரகாசம் சிவசிறிகுமரன் அவர்களின் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில், கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கும், வவுனியாவில் அமைந்துள்ள, சிவன் முதியோர் இல்லத்தில் வசிக்கும்,மூத்தோர்களுக்கும்,மதியச் சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அமரர் சிவப்பிரகாசம் சிவசிறிகுமரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல மண்டைதீவு வேப்பந்திடல் முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி…

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux