அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா (லோகு)அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்,சிறப்புணவு வழங்கிய நிகழ்வும்,இணைப்பு!

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா (லோகு)அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்,சிறப்புணவு வழங்கிய நிகழ்வும்,இணைப்பு!

தீவகம் அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தினைப்,பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும்-கொண்டிருந்த,அமரர் வேலாயுதபிள்ளை லோகேந்திரா (லோகு)அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் (திதி) 26.12.2020 சனிக்கிழமை இன்று  நினைவுகூரப்படுகின்றது.

அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு- அல்லையூர் இணைய அறப்பணிக் குடும்பத்தினரின் ஏற்பாட்டில்,கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதியச் சிறப்புணவு வழங்கப்படவுள்ளது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அவரது குடும்பத்தினருடன் இணைந்து -அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும்-எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux