
புலம்பெயர்ந்து வாழும் மக்களின் பேராதரவோடு,அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரால்,ஆதரவற்றவர்களுக்கான அன்னதானப்பணியானது,700 தடவைகளைத் தாண்டி முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
அமரர் செல்லையா கந்தசாமி அவர்களின் நினைவாக வழங்கப்படவுள்ள சிறப்புணவு வழங்கலுடன்-711வது தடவைகளை,எமது பசிபோக்கும் பணி தொட்டு நிற்கின்றது.
தமிழர் தாயகப்பிரதேசத்தில்,யாழ்ப்பாணத்திலிருந்து,அம்பாறை வரை-எமது பணியானது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அமரர் செல்லையா கந்தசாமி அவர்களின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி…


