மட்டுவில் புத்தூர் – மீசாலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பத்தலைவர் உயிரிழந்ததோடு மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.
விசுவமடுவைச் சேர்ந்த ரஜீவன் (வயது-24) என்ற இளம் குடும்பத்தலைவரே உயிரிழந்தார்.

கிடுகு ஏற்றியவாறு பயணித்த லாண்ட் மாஸ்ரருடன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டது.

படுகாயமடைந்த மூவரும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.