மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்,அல்லைப்பிட்டி கிழக்கை வசிப்பிடமாகவும்-பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் 11ம் ஆண்டு நினைவுதின சிறப்பு நிகழ்வு 15.12.2018 சனிக்கிழமை அன்று அல்லைப்பிட்டி வாகீசர் சனசமூகநிலைய மண்டபத்தில்,சிறப்பாக நடைபெற்றது.
அன்னாரின் குடும்பத்தினரால்,60 ஆயிரம் ரூபாக்கள்,வாகீசர் சனசமூக நிர்வாகத்திடம் வழங்கப்பட்டு-அந்நிதியினைக் கொண்டு சிறப்பான முறையில்,இந்நிகழ்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
அல்லைப்பிட்டி கிழக்குப்பகுதியில்,அமைந்துள்ள
வாகீசர் சனசமூகநிலைய மண்டபத்தில்,முதற்தடவையாக அமரர் லிங்கப்பிள்ளை கணேசமூர்த்தி அவர்களின் 11ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு நடைபெற்றது டன் மேலும் இப்பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புத்தகப்பைகளும் வழங்கி வைக்கப்பட்டன.





















