உலகப்புகழ்பெற்ற,நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் கோவில்கொண்டு அருள்பாலித்து வரும்-நயினாதீவின் முக்கிய இறங்குதுறையானது,நீண்டகாலத்தின் பின் தற்போது மிகப்பிரமாண்டமாக புனரமைக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் நயினாதீவில்,அமைந்துள்ள நாகவிகாரைக்குச் செல்வதற்கான இறங்குதுறையானது பலகோடிரூபா செலவில் புனரமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
ஆண்டுதோறும் நயினை நாகபூசணி அம்மனை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் -இந்த இறங்குதுறையூடாகவே வந்து செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
நிழற்படங்கள்….நயினை எம்.குமரன்