வேலணை பிரதேசசபையின் உறுப்பினர்களுக்கு,வழங்கப்பட்ட மின் விளக்குகள்-இன்றையதினம் (03.10.2018) பொருத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்டைதீவி்ல் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களான,திரு சிறிபத்மராஜா மற்றும் திருமதி மேரி மற்றில்டா ஆகிய இருவருக்கும் 22 மின்விளக்குகளும்-மேலும் அல்லைப்பிட்டியில் தெரிவாகிய திரு பிலிப் பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்கப்பட்ட 11 மின்விளக்குகளும்-இன்றையதினம் பொருத்தப்பட்டதாக,வேலணை பிரதேசசபையின் பணியாளர் ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.
அத்தோடு தீவகம் முழுவதும் பிரதேசசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட விளக்குகள் பொருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.