யாழ் தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள முருகமூர்த்தி கோவிலின் வருடாந்த,மகோற்சவம் கடந்த 20.08.2018 திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து 27.08.2018 திங்கட்கிழமை மாலை சப்பரத்திருவிழாவும்-மறுநாள் 28.08.2018 செவ்வாய்க்கிழமை அன்று தேர்த்திருவிழாவும்-29.08.2018 புதன்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும் இடம்பெற்றது.
மண்கும்பான் முருகனின் மகோற்சவத்தைக் காண வந்த அடியவர்களின் பசி போக்கிட- மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அமரர் திருமதி லீலாவதி சின்னத்தம்பி மணிமண்டபத்தில் திருவிழா உபயகாரர்களினால் பத்துத்தினங்களும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட தேர்,மற்றும் தீரத்திருவிழாக்களின் முழுமையான வீடியோப்பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
கொடியேற்றத்தின் உபயகாரர்…
திரு ஈசன் (மண்கும்பான்-லண்டன்)
தேர்த்திருவிழா உபயகாரர்கள்…
திரு நல்லநாதசிவம் கேதீஸ்வரன் (மண்கும்பான்-லண்டன்)
திரு பாலசுந்தரம் (மண்கும்பான்-பிரான்ஸ்)
தீர்த்தத்திருவிழா உபயகாரர்கள்….
திரு நாகராசா இராஜலிங்கம் (மண்கும்பான்-பிரான்ஸ்)
திரு சோமசுந்தரம் சோமகாந்தன்(மண்கும்பான்-பிரான்ஸ்)