எமது அல்லையூர் இணையத்தளம் இயங்குவதற்கு முதற்காரணமாகவிருந்து பேருதவி புரிந்து வரும்-பிரான்ஸில் வசிக்கும்,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு தவவிநாயகம் சந்திரகுமார் -தவநாயகி தம்பதிகளின் இரண்டாவது மகன் செல்வன் சிவப்பிரகாஷ் அவர்களுக்கும்-திரு சந்திரகுமார் அவர்களின் தங்கையான, சிிவானந்தன்-சத்தியபாலினி தம்பதிகளின் மூத்த மகள் செல்வி பத்மஸ்ரீ அவர்களுக்கும்-15.07.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பரிஸில் கீழ் வரும் முகவரியில் திருமணம் நடைபெறவுள்ளது.
இல்லற வாழ்வில் இணையும்,மணமக்களை,அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,கலாநிதி பண்டிதர் திரு செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் வாழ்த்திப்பாடிய மணமங்கல வாழ்த்துப்பாமாலை கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் மணமக்களை -அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினர் சார்பிலும்,அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்,வாழ்த்தி மகிழ்கின்றோம்.
திருமண மண்டப முகவரி…
Dock Pullman
50-Avenue President Wilson
93200 La Plaint Saint Denis
France