தீவகம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித பிலிப்பு நேரியாரின் வருடாந்த திருவிழா கடந்த 17-05-2018 வியாழக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி-தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் நடைபெற்று- 25.05.2018 வெள்ளிக்கிழமை மாலை நற்கருணை விழாவும்-மறுநாள் 26-05-2018 சனிக்கிழமை காலை வருடாந்த பெருநாள் விழாவும் வெகு சிறப்பாக நடைபெற்று கொடியிறக்கலுடன் வருடாந்தத் திருவிழா நிறைவு பெற்றது.
அல்லைப்பிட்டியில் புனித பிலிப்புநேரியார் பங்கு மக்களே பெரும்பான்மையாக வசித்து வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அல்லையூர் இணையத்தினால்,பதிவுசெய்யப்பட்ட வருடாந்த பெருநாள் விழாவின் முழுமையான வீடியோப்பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது.