யாழ் மண்டைதீவு கிழக்குப்பகுதியில்,29 விவசாயிகளின் விவசாய நிலங்கள்,அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டைதீவில் பிரசித்திபெற்ற,வேப்பந்திடல் முத்துமாரி அம்மன் ஆலயத்திலிருந்து சில நூறுமீற்றர் தூரத்திலிருந்து குறிப்பிடப்பட்டுள்ள விவசாயநிலங்களின் எல்லை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மண்டைதீவில் அமைந்துள்ள இலங்கை கடற்படையினரின் வெலுசுமன முகாமை விஸ்தரிப்பதற்காகவே -இந்த விவசாய நிலங்கள் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக கீழே இணைக்கப்பட்டுள்ள பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்படையால் சுவீகரிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு நஸ்டஈடு வழங்கப்படுமா?என்ற விபரங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.