யாழ் மண்டைதீவு,அல்லைப்பிட்டியில் பேரும்,புகழுடன் வாழ்ந்து மறைந்த,அமரர்கள் திரு,திருமதி இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதியினரின் ஞாபகார்த்தமாகவும்-அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகனின் ரதோற்சவத்தை முன்னிட்டும்- அல்லைப்பிட்டி முழுவதிலும் பாகுபாடின்றித் தெரிவு செய்யப்பட்ட நலிவுற்ற அறுபது குடும்பங்களைச் சேர்ந்த,உறுப்பினர்களுக்கு, 28.04.2018 சனிக்கிழமை அன்று அல்லைப்பிட்டி உபதபால் அலுவலகத்தில் வைத்து வாழ்வாதார நன்கொடைகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும்-அன்னார்களது பிள்ளைகள் கலந்து கொண்டு-தங்கள் கரங்களால் நலிவுற்ற மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்து மகிழ்ந்தனர்.
இவ்வுதவிகள் தொடர்ந்தும் தங்கள் பெற்றோர்களின் நினைவாக,வழங்கப்படும்-என்று எமது இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளனர்.