யாழ் தீவகம் மண்டைதீவைச் சேர்ந்த,அமரர் சின்னத்தம்பு வைரவநாதன் அவர்களின் 10 வது ஆண்டு நினைவு தினம் (திதி) 06.04.2018 வெள்ளிக்கிழமை இன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.
அன்னார், மண்டைதீவு முத்துமாரி அம்பாள் ஆலய முன்னாள் அறங்காவலர் சபைத்தலைவரும்,பிரபல புகையிலை வர்த்தகரும்,சமூக ஆர்வலரும் ஆவார்.
அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு-அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும்-“ஆயிரம் (1000) தடவைகள் அன்னதானம்”என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் 372 வது தடவையாக,அம்பாறை அம்மன் மகளிர் இல்ல மாணவிகளுக்கு ஒரு நாள் சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!