அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசி தீர்க்கும் அரிய பணியின் 338 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!
டென்மார்க்கில் வசிக்கும்-மண்டைதீவைச் சேர்ந்த,திரு சக்திதாசன் சிவசரணம் அவர்களின் செல்வப்புதல்வி செல்வி மதுராமகா அவர்களின் 14வது பிறந்தநாளை முன்னிட்டு- 07.02.2018 புதன்கிழமை அன்று-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-யாழ் உடுவிலில் அமைந்துள்ள THE ARK இல்லத்தில் தங்கியுள்ள விஷேட தேவைக்குட்பட்ட மாணவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டதுடன் மேலும் 10 ஆயிரம் ரூபாக்கள் பெறுமதியான விஷேட கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான நிதியுதவியினை வழங்கிய திரு சக்திதாசன் சிவசரணம் அவர்களுக்கு-எமது நன்றியினைத் தெரிவிப்பதோடு, 07.02.2018 அன்று பிறந்தநாளைக் கொண்டாடும்-செல்வி சக்திதாசன் மதுராமகாவிற்கு-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் சார்பில் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்ளோம்.
அல்லையூர் இணையம் முன்னெடுத்துவரும் ஆயிரம் (1000) தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணிக்கு,புலம்பெயர் மக்கள் தொடர்ந்தும் பேராதரவு வழங்கிவருகின்றனர்.கடந்த மாதங்களில் அதிகமுறை-யாழ்ப்பாணம் முதல்,அம்பாறை வரை எமது அன்னதானப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தமாதம்….கீழ் வரும் திகதிகளில் ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்க புலம்பெயர் மக்கள் முற்பதிவு செய்துள்ளனர்-என்பதனை மகிழ்ச்சியோடு உங்களுக்கு அறியத்தருகின்றோம்.
நீங்களும் சிந்தனை செய்யுங்கள்….
07.02.2018
08.02.2018
09.02.2018
10.02.2018
14.02.2018
17.02.2018
20.02.2018
25.02.2018
27.02.2018