மண்டைதீவு,அல்லைப்பிட்டியை,இணைக்கும் பரவைக்கடல் ஊடான வீதியை, புனரமைப்பதற்கான முதற்கட்டப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தற்போது ஜந்துமாத ஒப்பந்த அடிப்படையில் பாலம் ஒன்று அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு மாதகாலமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்-இதனைத் தொடர்ந்து காபட் வீதியமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்-உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வீதி அமைப்பதற்கான, நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆதாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.