அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசி தீர்க்கும் அரிய பணியின் 326 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!
காரைநகரைச் சேர்ந்த,அமரர் நாகமணி நடராஜா சண்முகநாதன் (அகில இலங்கை சமாதான நீதவான்)அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு-12.01.2018 வெள்ளிக்கிழமை இன்று-வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் திரு செ.சிறினிவாசன் அவர்களின் தலைமையில்-வவுனியாவில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்ல முதியவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.
அமரர் நாகமணி நடராஜா சண்முகநாதன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!