காலநிலை மாற்றத்தினால் வெளிநாட்டுப் பறவை இனங்கள் தீவகப் பகுதியில் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஊர்காவற்துறை, அல்லைப்பிட்டி, சாட்டி, வேலணை, மண்டைதீவு போன்ற பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி இப்பறவை இனங்கள் அதிகமாக வருகை தருகின்றனவாம்.
தீவகத்திற்கு படையெடுத்து வரும் வெளிநாட்டு பறவையினங்களை இரசிப்பதற்காக பலரும் குறித்த இடத்திற்கு வருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருவதாக மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.